2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

யாழில் இன்றும் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது

Editorial   / 2021 டிசெம்பர் 01 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

வட்டுக்கோட்டையில் வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் பதிவாகியுள்ளது.

வட்டுக்கோட்டை காளி கோவிலடியில் இன்று (01) முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எனினும், அடுப்பை தவிர வேறு சேதங்கள் எவையும் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, சுன்னாகம், கந்தரோடையில் உள்ள வீடொன்றில் இதேபோன்ற சம்பவம், கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X