2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

யாழில் சிறுவன் உட்பட நால்வர் கைது

Freelancer   / 2025 செப்டெம்பர் 11 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் சிறுவன் உட்பட நால்வர் நேற்று (10) ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர். 

16, 18, 20 மற்றும் 22 வயதுடைய நால்வர் 170 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டனர். 

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

விசாரணைகளின் பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர். R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .