Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2021 ஜூன் 13 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், என்.ராஜ்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், நேற்று (12) இரவு பெய்த காற்றுடன் கூடிய மழை காரணமாக, 17 குடும்பங்களைச் சேர்ந்த 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில், நேற்று (12) இரவு 8 மணி முதல் 10 மணி வரை கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ததாகவும் இதனால், 17 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், சிறுதொழில் முயற்சியாளர்கள் மூவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பாதிப்புகள் தொடர்பான விவரங்கள். சகல பிரதேச செயலகங்கள் ஊடாகவும் யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் சேகரிக்கப்பட்டு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், சூரியராஜ் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
40 minute ago