2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யாழில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4,919ஆக அதிகரிப்பு

Niroshini   / 2021 ஜூன் 24 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4,919ஆக அதிகரித்துள்தாக, யாழ். மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

யாழ். மாவட்டச் செயலகத்தில், நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், யாழ். மாவட்டத்தில், இதுவரை சுமார் 3,696 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் 72 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனரெனவும் கூறினார்.

தற்போது, யாழ். மாவட்டத்தில். உடுவில் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் இரண்டு கிராமங்களும் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவின் குருநகர் மேற்கு, ரெக்லமேசன் மேற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .