2025 மே 10, சனிக்கிழமை

யாழ். நகரில் கஞ்சாவுடன் இளைஞன் கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 03 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

யாழ். நகர்ப் பகுதியில், 248 கிராம் கஞ்சாவுடன் குருநகரை சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவர், யாழ். மதுவரி திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுவரி திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து, குறித்த நபர் யாழ்  நகரப் பகுதியில் விற்பனைக்குத் தயாராக தனது மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை மறைத்து வைத்திருந்த வேளையில் மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X