Niroshini / 2021 ஜனவரி 27 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன், செந்தூரன் பிரதீபன்
யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் சமர்ப்பித்த 2021க்கான பாதீடு வெற்றிபெற்றுள்ளது.
இதன்போது, 26 வாக்குகள் ஆதரவாகவும் எதிராக 3 வாக்குகளும் வழங்கப்பட்டன.
15 பேர் நடுநிலை வகித்தனர். அத்துடன், முன்னாள் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்; சபைக்கு சமூகமளிக்கவில்லை.
இதன்மூலம், யாழ்ப்பாணம் மாநகர சபையின் தற்போதைய ஆட்சி 2021ஆம் ஆண்டில் நீடிக்கும்.
இன்றைய வாக்கெடுப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பெரும்பாலோனோர் நடுநிலை வகித்தனர். அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 3 உறுப்பினர்கள் எதிராகவும் 10 உறுப்பினர்கள் ஆதரவாகவும் வாக்களித்தனர்.
9 hours ago
9 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
20 Mar 2026