2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

யாழ்.விபத்தில் குடும்பப் பெண் ​பலி

Janu   / 2025 டிசெம்பர் 21 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - பொம்மைவெளி பகுதியில் சனிக்கிழமை (20) இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மூளாய் பகுதியைச் சேர்ந்த தாயும் மகளும் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது எதிர் திசையில்  வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று முந்தி செல்ல முற்பட்டவேளை நிலைகுலைந்த தாயும் மகளும் மோட்டார் சைக்கிளுடன் நடு வீதியில் விழுந்தனர்.

இதன்போது எதிர் திசையில் வந்த கலி பவுசர் அந்த தாயின் மீது ஏறியதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பு.கஜிந்தன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X