2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

யாழ்ப்பாணத்தில் கனடா பிரஜைகள் கைது

Editorial   / 2020 ஜனவரி 06 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணத்தில், விசா முடிவடைந்த நிலையில், தொடர்ந்தும் இலங்கையில் தஙிகியிருந்தக் குற்றச்சாட்டில், யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட இரண்டு கனடா பிரஜைகள், நேற்று (05) இரவு, யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும், இலங்கையில் இருந்து கனடாவில் தஞ்சம் புகுந்து வசித்து, கனடா பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்டுள்ளவர்களென, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இலங்கையில் தங்கி நிற்பதற்கான கால அவகாசம் முடிவடைந்த போதும் அவர்கள் மீண்டும் கனடாவுக்குச் செல்லாததன் காரணத்தாலேயே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .