Niroshini / 2021 ஜூன் 21 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் அமைக்கப்பட்டிருக்கும் கொரோனா சிகிச்சை நிலையத்தில், வட இந்தியர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து, எவரும் அச்சமடைய தேவையில்லையென, யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் எஸ். ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், தொடர்ந்துரைத்த அவர், கொழும்பு புறநகர் பகுதியொன்றில், கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்ட இந்தியர்கள் சிலர், கோப்பாய் சிகிச்சை நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் எனவும் அவர்கள் இரண்டு வருடங்களுக்கு மேலாக இலங்கையில் தங்கியிருந்து, தொழில் புரிவதாகவும் தெரிவித்தார்.
ஆகவே, அவர்கள் தொடர்பில் எவரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago