2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

வரட்சியால் மரங்களுக்கு ஆபத்து

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 ஏப்ரல் 22 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக நிலவிவரும் தொடர் வரட்சி காரணமாக, பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இவ்வாறு தொடரும் வரட்சியால், கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்து வரும் மக்கள், தமது வாழ்வாதாரத்துக்காக வளர்த்துள்ள பெருமளவான பயன் தருமரங்கள்அழிவடைந்து வருகின்றன.

குறிப்பாக, இவ்வரட்சியால் யுத்தத்தின் பின்னர் மீள்நடுகை செய்யப்பட்ட தென்னை, மா, பலா போன்ற மரங்களும் அழிவடைந்து வருகின்றன.

கடந்த மூன்று ஆண்டுகளாக நிலவி வரும் வரட்சியாலும் இவ்வாறு பயன்தரு மரங்கள் அழிவடைந்த போதும், அவற்றின் புள்ளிவிவரங்கள் எவையும் பெறப்பட்டதோ அல்லது அவற்றுக்கான இழப்பீடு வழங்கப்பட்டதோ இல்லை என, வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X