Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
க. அகரன் / 2018 ஜூலை 09 , பி.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியாவின் பல பகுதிகளில், நேற்று (08) இரவு ஏற்பட்ட வாள்வெட்டு மற்றும் குழு மோதல்களில் 7 பேர் படுகாயங்களுக்குள்ளான நிலையில், வவுனியா வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் நேற்று முன்தினம் (08) இரவு 7 மணியளவில், மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் சிலர், அப்பகுதியில் நின்றுக்கொண்டிருந்த இளைஞர்கள் மீது வாள் வெட்டு மேற்கொண்டதில், ஒருவர் படுகாயமடைந்தார்.
இதையடுத்து, சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக, பூந்தோட்டம், பெரியார்குளம் மற்றும் தோணிக்கல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 10 இளைஞர்களை, வவுனியா குற்றதடுப்புப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன், அவர்களிடமிருந்து வாள் ஒன்று, கோடரி, கேபிள்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை, மதினா நகர் பகுதியில், இருவருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில், இருவர் காயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியாசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
அத்துடன், நேற்று முன்தினம் (08) இரவில் மாத்திரம், மதுபோதை காரணமாக ஏற்பட்ட மோதல் சம்பவங்களில், 7 பேர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையின் விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
4 hours ago
9 hours ago