Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2021 ஜூலை 12 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், டி.விஜித்தா
யாழ்ப்பாணம் - சித்தங்கேணி சிவன் கோவில் நிர்வாகத்துடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இந்தச் சம்பவம், நேற்று (11) இடம்பெற்றுள்ளது.
அந்தக் கோவில் வளாகத்தினுள் வைத்தே, இந்த வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவில் நிர்வாகத்தில் உள்ள ஒருவருக்கும் மற்றுமொருவருக்கும் இடையில் கோவில் நிர்வாகம் தொடர்பில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இந்த வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில், கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்தவரை மற்றைய நபர் தன் உடமையில் மறைத்து வைத்திருந்த வாளால் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
குறித்த நபர் தப்பியோடும் போது, அவர் கொண்டு வந்திருந்த வாள் தவறி விழுந்துள்ளது. அதனை அங்கிருந்தவர்கள் மீட்டு வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அதேவேளை, வாள்வெட்டுக்கு இலக்கான நபரையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் வட்டுக்கோட்டை பொலிஸார், சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
வாள்வெட்டை மேற்கொண்டவர், திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்தவரென விசாரணையில் தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago