Editorial / 2020 செப்டெம்பர் 27 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியின் மருதனார்மடம் பகுதியில், நேற்று இரவு, இடம்பெற்ற விபத்தில், இரு யுவதிகள் படுகாயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளும் ஹயஸ் வானும் விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு யுவதிகளும் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயங்களுக்குள்ளான பெண்கள், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நகுலேஸ்வரா வீதி - கீரிமலை பகுதியைச் சேர்ந்த 21, 22 வயதுடைய பெண்களே, இவ்வாறு படுகாயமடைந்தவர்களாவர்.
விபத்தையடுத்து, வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago