2025 மே 10, சனிக்கிழமை

வீட்டுத்திட்டம் தொடர்பில் மீளாய்வுக் கூட்டம்

Editorial   / 2020 செப்டெம்பர் 03 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

யாழ். மாவட்டத்தில்  மீள்குடியேற்ற நிலைமை மற்றும் வீடமைப்பு தொடர்பாக ஆராயும் விசேட கூட்டமொன்று, யாழ். மாவட்ட மேலதிகச் செயலாளர் ம.பிரதீபன் தலைமையில், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர், மேலதிகச் செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

யாழ். மாவட்டத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிகளில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தற்போதும் இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் உள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் காணி விடுவிப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் இன்றைய தினம் ஆராயப்படவுள்ளதோடு, அரசாங்கத்தில் நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத்திட்டங்கள் தொடர்பிலும் இன்றைய கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X