Niroshini / 2021 ஜூன் 17 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணம் மாநகர சபையால், யாழ். நகர் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் வடிகால் துப்புரவு பணியின் போது, வெடிக்காத நிலையில் எறிகணை (செல்) ஒன்று, இன்று (17) காலை மீட்கப்பட்டுள்ளது.
யாழ்.நகர் - ஸ்டான்லி வீதி பகுதியூடாக செல்லும் வெள்ளவாய்க்கால், கடந்த சில தினங்களாக, யாழ். மாநகர சபை தூய்மைப்படுத்தும் தொழிலாளிகளால் துப்புரவு செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், இன்றைய தினம் (17) காலை, வழமை போன்று அவர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த போதே, வெடிக்காத நிலையில் எறிகணை ஒன்றை அடையாளங்கண்டுள்ளனர்.
இது தொடர்பில், யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், எறிகணையை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
21 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago