2025 மே 22, வியாழக்கிழமை

போதைப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 7 பேர் கைது

Kogilavani   / 2013 ஜனவரி 15 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

போதைப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பொண்ணொருவர் உட்பட 7 பேரை ராஜாங்கனை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைசெய்துள்ளனர்.

ராஜாங்கனை யாய 13 பிரதேசத்தில் 1 கிலோ கிராம் 200 கிராம் கஞ்சாவை வைத்திருந்த இரு இளைஞர்களையும், யாய 6 பிரதேசத்தில் 70 கிராம் கஞ்சாவை வைத்திருந்த பெண்ணொருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை புத்தளம் பகுதியில் 30 பக்கற் கஞ்சாவை வைத்திருந்த இருவரையும், ராஜாங்கனை பகுதியில் கஞ்சா வைத்திருந்த மற்றுமிருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

ராஜாங்கனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் டப்ளியூ. எம். டப்ளியூ. பீ. விஜேகோனின் ஆலோசனைப்படி சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர்கள் கைதுசெய்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X