2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இரு பாடசாலை மாணவர்களுக்கிடையில் கைகலப்பு; 15 பேர் காயம்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 06 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

குருநாகல், இப்பாகமுவ பகுதியிலுள்ள இரண்டு  பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் 15 பேர் காயமடைந்துள்ளதாக இப்பாகமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று திங்கட்கிழமையே இப்பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டது. இப்பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர் சங்க ஒன்றுகூடலின்போதே இக்கைகலப்பு ஏற்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

காயமடைந்த மாணவர்கள் குருநாகல் மற்றும் பொல்கஹவெல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .