2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 13 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூனேவ பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகத் கருதப்படும் இருவர்   மீரிகம பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் திருடியதாக கருதப்படும் ஒரு மோட்டார் சைக்கிள்,  டிஜிட்டல் கமெரா உள்ளிட்ட இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக மதவாச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பீ.எம்.திஸாநாயக்க தெரிவித்தார்.
    
இச்சந்தேக நபர்கள் இருவரும் பல்வேறு குற்றச்செயல்கள்  தொடர்பில் மீரிகம பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர்களெனவும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X