2025 மே 22, வியாழக்கிழமை

அநுராதபுரத்தில் பல பகுதிகள் நீரில் மூழ்கின

Kogilavani   / 2013 ஜனவரி 08 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.சீ.சபூர்தீன்

சீரற்ற காலநிலைக் காரணமாக அநுராதபுரம் லேன் பகுதி, சாலியாபுர- புலியங்குளம் பகுதிகள் மற்றும் அழுத்கம பிரதான வீதி இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் நீரில் மூழ்கியுள்ளன.

அநுராதபுரத்தில் நேற்று முதல் பெய்துவரும் தொடர்ச்சியான மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அநுராதபுரம் லேன் பகுதி மற்றும் சாலியாபுர - புலியங்குளம் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

இதனால் சுமார் 20க்கும் மேற்பட்ட கிராம மக்களின் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ள, இதேவேளை பிரதேசத்திலுள்ள நூற்றுக்கணக்கான வயல் நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளன.

மேலும் மல்வத்துஓயாவின் நீர்மட்டம் பெருகி வருவதனால் வெள்ளநீர் அதிகரித்து வருகிறது.

இதேவேளை ரம்பாவ, இக்கிரிகொள்ளாவ, அநுராதபுரம்- அழுத்கம பகுதிகளும் வெள்ள அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X