2025 மே 22, வியாழக்கிழமை

மனைவியை தாக்கிய இராணுவ வீரருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2013 ஜனவரி 12 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம். சீ. சபூர்தீன்

தனது மனைவியை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இராணுவ வீரர் ஒருவரை எதிர்வரும் 22ஆம்  திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான மஜிஸ்திராத்தும் மேலதிக மாவட்ட நீதவானுமான ருவன்னிகா மாரப்பன உத்தரவிட்டார்.

இலக்கம் 28, நாபான, உன்னப்பான பகுதியைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

விடுமுறையில் வீட்டுக்கு வந்த இராணுவ வீரர் தனிப்பட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தி தனது மனைவியை கை, கால் மற்றும் கற்களினால் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X