2025 ஜூலை 10, வியாழக்கிழமை

விமான எதிர்ப்பு ஏவுகணைக்கான ரவைகள் மீட்பு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 23 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்கும் தூர இடங்களை இலக்குவைப்பதற்கும் பயன்படுத்தக்கூடிய ஒருதொகை ரவைகள் மிஹிந்தலை, மஹகனந்தராவ வாவிப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

இவைகள் 150 - 300 மீற்றர்வரை சென்று தாக்கக்கூடியது என பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

மஹகனந்தராவ வாவி வழியாக அமைக்கப்பட்டுள்ள அநுராதபுரம் - திருகோணமலை பிரதான வீதியின் பாலத்திற்கு அருகிலிருந்தே இவைகள் நேற்று செவ்வாய்கிழமை மீட்கப்பட்டுள்ளன.

அண்மைய காலங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்போது 2000க்கும் மேற்பட்ட ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றையதினம் மாத்திரம் 300 எம்.பீ.எம்.ஜீ. வகை ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த 20 ஆம்  திகதி  எம்.பீ.எம்.ஜீ. வகை ரவைகள் 1192, டீ 56 ரக ரவைகள் 761 மீட்கப்பட்டிருந்தன. இந்த ரவைகள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .