2025 மே 22, வியாழக்கிழமை

சட்டவிரோதமாக தேக்கு மரங்களை வெட்டிய நபருக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 21 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

மிஹிந்தலை அரச வனப் பகுதியில் சட்டவிரோமாக புகுந்து தேக்கு மரங்களை வெட்டிப் பலகையாக்கிய நபர் ஒருவருக்கு 25 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேற்படி குற்றச்சாட்டில் கைதான நபரை நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தியபோதே, அநுராதபுரம் பிரதான மஜிஸ்திரேட்டும் மேலதிக மாவட்ட நீதவானுமான ருவன்னிகா மாரப்பன இவ்வாறு தீர்ப்பளித்தார்.

கைப்பற்றப்பட்ட தேக்கு மரப் பலகைகளை அரசாங்க உடைமையாக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X