2025 மே 21, புதன்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் பலி

Kogilavani   / 2013 மார்ச் 08 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.மும்தாஜ்

ஆண்டிகம ரஸ்நாயகபுர வீதி, பெரியமடு பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்விபத்துச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பகல் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் குருநாகல் அலுத்மல்கடுவாவ எனும் பிரதேசத்தைச் சேர்ந்த எல்.என்.ஜயசிங்க (வயது 58) என்பவரே உயிரிழந்துள்ளார்.

தனது வாகனத்திலிருந்து இறங்கிய போது வீதியில் வந்த டிப்பர் ரக வாகனம் ஒன்றில் மோதி இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

டிப்பர் ரக வாகனத்தின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .