2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'மாவட்டத்தின் அபிவிருத்தியில் பிரதேச ஊடகவியலாளர்களின் பங்களிப்பு' எனும் செயலமர்வு

Super User   / 2013 ஜூலை 02 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம். ஹிஜாஸ், எஸ். எம். மும்தாஜ்


மாவட்டத்தின் அபிவிருத்தியில் பிரதேச ஊடகவியலாளர்களின் பங்களிப்பு" எனும் தலைப்பிலான செயலமர்வு புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரச தகவல் தினைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கருத்தரங்கில் மாவட்டத்தின் பிரதேச ஊடகவியலாளர்களும் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்திகள் தொடர்பிலும், மாவட்டத்தின் உற்பத்திகள் மற்றும் அவற்றின் தற்போதைய நிலைமை தொடர்பில் தெளிவூட்டப்பட்டது. கலாநிதி, சட்டதரணி டி.எம். கருணாரத்ன இக்கருத்தரங்கில் ஊடக ஒழுக்க நெறி, தர்மம், சட்டம் தொடர்பில் விசேட உரையாற்றினார்.

தகவல் தினைக்களத்தின் செய்தி பிரிவு பணிப்பாளர் வசந்த ராமநாயக்க, புத்தளம் மாவட்ட செயலாளர் கிங்சிலி பெர்ணான்டோ, தகவல் திணைக்கள அதிகாரிகள், உட்பட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X