2025 மே 15, வியாழக்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்: இராணுவ வீரர் கைது

Kanagaraj   / 2013 ஜூலை 17 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

சிறுமி ஒருத்தியை அவளது பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகச் கூறப்படும் இராணுவ வீரர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் பயிற்சி பெற்று வரும் இராணுவ வீரர் ஒருவரையே நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளதாக கருவலகஸ்வௌ பொலிசார் தெரிவித்தனர்.

தப்போவ 7 ஆம் மைல் பிரதேசத்தில் வசிக்கும்  20 வயது இளைஞரான இராணுவ வீரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கடந்த 9 ம் திகதி விடுமுறையில் தனது வீட்டுக்கு வந்திருந்த சமயம் அப்பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதான சிறுமியை அவளது பெற்றோருக்குத் தெரியாமல் கடத்திச் சென்று இக்குற்றத்தைப் புரிந்துள்ளார்.

இது தொடர்பில் பெற்றோரினால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

எனினும், குறித்த சந்தேகநபரான இராணுவ வீரர் தனது பயிற்சிக்காக இராணுவ பயிற்சி பாடசாலைக்குச் சென்றுவிட்டார்;.  சந்தேக நபர் மீண்டும் விடுமுறையில் வீடு வந்திருந்த போது இது தொடர்பில் பொலிசாருக்குக் கிடைத்த தகவலையடுத்து கருவலகஸ்வௌ பொலிசார் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கருவலகஸ்வௌ பொலிசார் சந்தேக நபரை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .