2025 மே 08, வியாழக்கிழமை

மின்னல் தாக்கி குடும்பஸ்தர் பலி

Thipaan   / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

கற்பிட்டி, துறையடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை (25) காலை மின்னல் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இளைஞரொருவர் காயமடைந்து கற்பிட்டி தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இருவரும்  மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு கரைக்கு திரும்பிய பின்னரே மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளளர்.

கற்பிட்டியினை சேர்ந்த 34 வயதுடைய குமார் தல்மேதா எனும் குடும்பஸ்தரே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கற்பிட்டி தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X