2025 மே 08, வியாழக்கிழமை

மகளிர் சங்கங்களின் பிரநிதிகளுடனான விசேட கலந்துரையாடல்

Kogilavani   / 2015 ஏப்ரல் 29 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் மகளிர் சங்கங்களின் பிரநிதிகளுடனான விசேட கலந்துரையாடலொன்று புத்தளம் நகர முதல்வரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளருமான கே.ஏ.பாயிஸ் தலைமையில் செவ்வாய்க்கிழமை (28) மாலை புத்தளம் பொது நூல்நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

நகர சபை தலைவர் மேற்கொண்டு வரும் பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு உறுதுணையாக செயற்பட்டு வரும் மகளிர் சங்கங்களின் பிரதிநிதிகள் பலரும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் களம் குதிக்க உள்ள கே.ஏ.பாயிஸுக்கு தமது பூரண ஆதரவை வழங்க உள்ளதாக கலந்துரையாடலில் கலந்துகொண்ட மகளிர் சங்கங்களின் பிரதிநிதிகள் இதன்போது உறுதியளித்தனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட மகளிர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் அன்பளிப்புகளை வழங்கி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X