ரஸீன் ரஸ்மின் / 2017 ஜூலை 11 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

கற்பிட்டி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்குட்பட்ட பிரதேசத்தில் 23 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, கற்பிட்டி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கற்பிட்டி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்குட்பட்ட பிரதேசத்தில், இன்று செவ்வாய்க்கிழமை சகல வர்த்தக நிலையங்களிலும் பொது சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே, இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது, வர்த்தக நிலையங்களில் சுத்தமின்மை மற்றும் காலாவதியான உணவுப் பண்டங்கள், பொருட்கள் என்பன விற்பனைக்காக வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ், குறித்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


7 minute ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
7 hours ago
9 hours ago