2025 மே 06, செவ்வாய்க்கிழமை

காட்டு யானையின் தாக்குதலில் ஒருவர் பலி

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 19 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

- துஷார தென்னகோன்

பொலன்னறுவை, தியபெதுமப் பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி நபரொருவர், இன்று செவ்வாய்கிழமை (19) அதிகாலை உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

பகமூன, சமகிபுரப் பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
   
குறித்த நபர், பகமூனப் பிரதேசத்திலிருந்து கிரதலப் பிரதேசத்துக்கு சென்றுகொண்டிருக்கும் போதே காட்டு யானைத் தாக்;குதலுக்கு உள்ளாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 
 
இச்சம்வம் குறித்த மேலதிக விசாரணைகளை தியபெதுமப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X