ரஸீன் ரஸ்மின் / 2017 ஓகஸ்ட் 05 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

புத்தளம், மஹாவெவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் வாழும் 46 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு, வியாழக்கிழமை பௌத்த விகாரையில் வலஹாப்பிட்டிய நடைபெற்றது.
கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக தாம் வாழும் காணிக்கு உறுதிப்பத்திரம் இல்லாமல் இருந்த குடும்பங்களுக்கே, காணி உறுதிப்பத்திரங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
குறித்த பயனாளிகளுக்கான காணி உறுதிப்பத்திரங்களை, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி வழங்கிவைத்தார்.
இந்த நிகழ்வில், பௌத்த மதகுருமார்கள் மற்றும் மஹாவெவ பிரதேச செயலாளர் உட்பட அதிகாரிகளும் அரசியல் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
1 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago