Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 பெப்ரவரி 13 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம், கற்பிட்டி - தளுவ பிரதேசத்தில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை காய்ந்த இஞ்சி மூட்டைகளுடன் சந்தேக நபர்கள் மூவர் செவ்வாய்க்கிழமை (11) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான புத்தளம் - தம்பபன்னி நிறுவன கடற்படையினர் கற்பிட்டி - தளுவ பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (11) இரவு விசேட சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன் போது, சந்தேகத்திற்கிடமான கெப் வண்டி ஒன்றை கடற்படையினர் சோதனையிட்டனர்.
குறித்த கெப் வண்டியில், 32 பொதிகளில் அடைக்கப்பட்ட நிலையில் 1158 கிலோ 60 கிராம் உலர்ந்த இஞ்சியும், 45 கிலோ கிராம் கருவாடும் கடற்படையினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புத்தளம் மற்றும் மணல் தோட்டம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட உலர்ந்த இஞ்சி, உலர்ந்த கருவாடு மற்றும் கெப் வண்டி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago