Princiya Dixci / 2016 ஜனவரி 19 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஹிரான் பிரியங்கர ஜயசிங்க
புதிய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட அமைச்சர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கி 04 மாதங்கள் கடந்தும் எவ்வித சலுகைகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லையென திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் பாலித ரங்க பண்டார குற்றம்சாட்டினார்.
ஆனமடுவவில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சிந்திப்பிலேயே அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார்.
கடந்த ஒகஸ்ட் மாதம் 17ஆம் திகதி புதிய அரசாங்கத்தினால் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு காரியாலய வசதி மற்றும் வாகன வசதி என எதுவும் இதுவரைக் கிடைக்கவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், என் அமைச்சின் கீழ் 11 அரச திணைக்களங்கள் இயங்குகின்றன. ஆனால், முறையாக நடத்துவதற்கு எந்தவித சலுகைகளும் கிடைக்கவில்லை. எனவே, இது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் கவனம் செலுத்துமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago