2025 மே 07, புதன்கிழமை

மின்னல் தாக்கி ஒருவர் பலி

Thipaan   / 2015 செப்டெம்பர் 05 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

பொலன்னறுவை கிரிதலே வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கி நேற்று வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்துள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்தில் உயிரிழந்தவர் ஹிங்குரக்கொடை ரஜ-எல பிரதேசத்தைச் சேர்நத அனில் குமார என்ற 30 வயதுடைய இளைஞராவார்.

இவரது சடலம் தற்போது பொலன்னறுவை வைத்தியசாவையில் வைக்கப்பட்டுள்ளதுடன்  மரணம் தொடர்பான மரண விசாரணைகள்  இன்று(05) இடம்பெறவுள்ளதாக தெரிவித்த மின்னேரிய பொலிஸார், இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X