Editorial / 2020 பெப்ரவரி 06 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிரன் பிரியங்கர
நவத்தேகம பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில், பெரும் அச்சுறுத்தல் விடுத்துவரும் காட்டு யானைகளை அங்கிருந்து விரட்டியடிக்கும் விசேட செயற்பாடு, நேற்று (05) முதல் 15 நாள்கள் வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
நவத்தேகம மக்கள், அரச பணியாளர்கள், அரசியல்வாதிகள் இணைந்து இந்த செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றனர்.
புத்தளம் மாவட்டச் செயலாளர் சந்திரசிறி பண்டாரவின் ஆலோசனையின் பேரில், புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக்க பிரியந்தவின் பூரண கண்காணிப்பின் கீழ், இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது.
இந்த செயற்பாட்டில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் 30 பேரும், சிவில் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் 29 பேரும் பங்கேற்றுள்ளனர்.
நவத்தேகம பிரதேசத்தில், நீண்ட காலமாக நிலவிவரும் யானைகளின் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கிலும் மக்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கிலும், இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது.
3 hours ago
5 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago
8 hours ago