2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஒக்டோபர் மாத மொத்த ஏற்றுமதி 1.04 பில். டொலர்களாக பதிவு

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 04 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒக்டோபர் மாதத்தில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி 1.04 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்ததாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் காணப்பட்ட பொருளாதார மீட்சியான சூழ்நிலைக்கமைவாக, ஒக்டோபர் மாதத்தில் நாட்டின் மொத்த ஏற்றுமதி அதிகரித்திருந்ததுடன், இறக்குமதி மீதான செலவீனத்தில் சரிவு காணப்பட்டதாகவும் மத்தியவங்கி மேலும் தெரிவித்திருந்தது.
 
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஏற்றுமதி மூலமாக வருமானம் 1 பில்லியன் ரூபாவை விட அதிகரித்து பதிவாகியிருந்ததாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 35.1 வீத அதிகரிப்பு என்பதுடன், 2011 மே மாதத்தில் பதிவாகியிருந்த உயர் பெறுமதியின் பின்னர் பதிவாகிய அதியுயர் பெறுமதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த அதிகரிப்பில் பெருமளவான பங்களிப்பை விவசாய உற்பத்திகள் மற்றும் ஆடை உற்பத்திகளும் வழங்கியிருந்தன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .