2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

சக்தி துறைகளுக்கு உதவும் வகையில் 90 மில். யுரோ இலங்கைக்கு உதவி

A.P.Mathan   / 2013 மார்ச் 22 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் சிறிய மற்றும் மத்தியளவு வர்த்தக நடவடிக்கைகள் மற்றும், மீள்பயன்படுத்தக்கூடிய சக்தி துறைகளுக்கு உதவும் வகையில் ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் மூலம் 90 மில்லியன் யுரோ நிதியுதவியை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இந்த நிதித்தொகை இலங்கையின் டிஎவ்சிசி, கொமர்ஷல், பிராந்திய அபிவிருத்தி வங்கிகளின் மூலமாக கடன் அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. மீள்பயன்படுத்தக்கூடிய சக்தி துறைக்குரிய கடன் தொகை தனியார் அல்லது அரச துறையை சார்ந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

20 வருட காலப்பகுதிக்குள் மீள் செலுத்தக்கூடிய வகையில், 2.9 வீத வருடாந்த வட்டிக்கு ஐரோப்பிய முதலீட்டு வங்கி இலங்கைக்கு இந்த கடன் தொகையை வழங்கவுள்ளது. இவ்வாறு வழங்கப்படும் தொகையில் 70 வீதமான தொகை சிறிய மற்றும் மத்தியளவு வர்த்தகத்துறைக்கும், எஞ்சிய 30 வீதமான தொகை மீள்பயன்படுத்தக்கூடிய சக்தி துறைக்கும் வழங்கப்படவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .