2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

தொடர்ச்சியான ஆறாவது நாளாக பங்குச்சந்தை சரிவு

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 21 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடர்ச்சியான ஆறாவது நாளாக பங்குச்சந்தை சரிவுப் பெறுமதியை பதிவு செய்திருந்தது. இதில் சிலோன் டொபாக்கோ கம்பனியின் விலைச்சரிவு பங்களிப்பை வழங்கியிருந்தது. நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி மற்றும் டயலொக் ஆக்சியாடா ஆகியவற்றின் சந்திப்புகளின் காரணமாக மொத்தப்புரள்வு பெறுமதி உயர்வடைந்திருந்தது. மேலும், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது அதிகளவு ஈடுபாடு காணப்பட்டதுடன், கொத்மலே ஹோல்டிங்ஸ் மற்றும் எக்ஸ்போலங்கா பங்குகள் மீதும் நாட்டம் காணப்பட்டது.

வங்கி, நிதியியல் மற்றும் காப்புறுதி துறை மொத்தப்புரள்வு பெறுமதியில் அதிகளவு பங்களிப்பை செலுத்தியிருந்தது (நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி, கொமர்ஷல் வங்கி மற்றும் சம்பத் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன்) துறையின் சுட்டெண் 0.73% சரிவை பதிவு செய்திருந்தது. நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பங்கொன்றின் விலை மாற்றமின்றி 66.00 ரூபாவாக பதிவாகியிருந்தது.

வெளிநாட்டு உரிமையாண்மை 147,851 பங்குகளால் குறைந்திருந்தது. கொமர்ஷல் வங்கி பங்கொன்றின் விலை 2.00 ரூபாவால் (1.69%) குறைவடைந்து 116.00 ரூபாவாக பதிவாகியிருந்தது. சம்பத் வங்கி பங்கொன்றின் விலை மாற்றமின்றி 170.00 ரூபாவாக பதிவாகியிருந்தது.

தொலைத் தொடர்பாடல்துறை மொத்தப்புரள்வு பெறுமதியில் இரண்டாவதாக அதிகளவு பங்களிப்பை செலுத்தியிருந்தது (டயலொக் ஆக்சியாடா பங்களிப்புடன்) துறையின் சுட்டெண் 0.24% உயர்வை பதிவு செய்திருந்தது. டயலொக் ஆக்சியாடா பங்கொன்றின் விலை 0.10 ரூபாவால் (1.10%) உயர்வடைந்து 9.20 ரூபாவாக பதிவாகியிருந்தது. வெளிநாட்டு உரிமையாண்மை 15,092,958 பங்குகளால் சரிவடைந்திருந்தது.

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகளும் மொத்தப்புரள்வு பெறுமதியில் அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தது. பங்கொன்றின் விலை 1.00 ரூபா (0.47%) குறைவடைந்து 214.00 ரூபாவாக பதிவாகியிருந்தது. வெளிநாட்டு உரிமையாண்மை 129,973 பங்குகளால் அதிகரித்திருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .