2026 மே 07, வியாழக்கிழமை

வீட்டுத் தோட்டங்களில் வல்லப்பட்டை செய்கையை ஊக்குவிக்கும் சதாஹரித நிறுவனம்

A.P.Mathan   / 2014 ஜூன் 17 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வணிக நோக்கிலான வனவளர்ப்பு செயற்பாட்டில் தலைமைத்துவத்தை கொண்டுள்ள சதாஹரித பிளாண்டேஷன் லிமிடெட் நிறுவனம், அண்மையில் வீட்டுத் தோட்டங்களில் வல்லப்பட்டை மரங்களை வளர்ப்பதற்கு சாத்தியம் உள்ளதாக அறிவித்துள்ளது.

சதாஹரித பிளான்டேஷன் நிறுவனமானது, வல்லப்பட்டை தொடர்பில் ஊடகங்களில் வெளியாகும் தவறான நம்பிக்கைகளை இல்லாதொழிக்கும் முகமாக தேசிய ஆராய்ச்சி மன்றம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வனவியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் பிரிவு ஆகியவற்றுடன் இணைந்து ஓர் ஆய்வினை முன்னெடுத்திருந்தது. இந்த ஆய்வில் வல்லப்பட்டை மரங்களின் அழிவு மற்றும் அதன் தாக்கங்கள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது. இந்த திட்டத்திற்கு இலங்கை அரசாங்கமும் நிதியுதவிகளை வழங்கி ஆதரவு வழங்கியிருந்தது.

இந்த திட்டத்தின் பிரதான நோக்கம், ஒரு தசாப்தத்தினுள் அகர்வுட் பிசின்களை உற்பத்தி செய்யக்கூடிய பெறுமதியான வல்லப்பட்டை மரங்களை பொருளாதார ரீதியான செய்கையை அபிவிருத்தி செய்தல் மற்றும் வளர்த்தல் உள்ளிட்ட சாத்தியங்களை ஏற்படுத்துவதுடன், வீட்டுத் தோட்டங்களில் வல்லப்பட்டை மரங்களை வளர்ப்பதால் ஏற்படும் அனுகூலங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.

கிரினோப்ஸ் வல்லா என்ற விஞ்ஞானப் பெயர் கொண்ட வல்லப்பட்டை தைமலேசியா குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இந்த தாவரத்தின் எட்டு வகையான இனங்கள் தெற்கிழக்காசிய நாடுகளின் வனப்பகுதியில் கிடைக்கின்றன. இந்த வகைகளிலுள்ள கிரினோப்ஸ் வல்லா என்பதே இலங்கையில் வல்லப்பட்டை என அறியப்படுகிறது. இலங்கையில் முன்னர் இந்த வகையான மரங்களை கிராமத்தவர்கள் சடங்குகள் மற்றும் பாரம்பரிய மத சடங்குகளின் போது பயன்படுத்தினர். இருப்பினும் 2012 ஆம் ஆண்டிற்கு பின்னர், இந்த மரங்களுக்கான கேள்வி உலக அரங்கில் அதிகரிக்கத் தொடங்கிய பின்னர் இந் நிலைமை மாற்றமடைந்தது.

இந்த மரங்களுக்கு இயற்கையாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் கருமையான பிசின் திசுக்களின் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இது அகர்வுட் எனப்படுகிறது. தாவரவியலாளர்களின் கருத்துப்படி, இயற்கையாக பிசின்கள் உற்பத்தியாவதற்கு 25-30 வரையான வருடங்கள் ஆகும் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இயற்கையாக பெறப்படும் அகர்வுட் மூலம் வாசணைத் திரவியங்கள், தூபம் மற்றும் அழகுசாதன பொருட்கள் போன்றன உற்பத்தி செய்யப்படுகின்றன.




சதாஹரித பிளாண்டேஷன் நிறுவனம் மூலம் முன்னெடுக்கப்பட்ட இவ் ஆய்வின் மற்றுமொரு முக்கிய குறிக்கோள், இந்த மரங்களின் அழிவு தொடர்பில் பொது மக்கள் மத்தியில் விழிப்பூட்டுதலாகும். இலங்கையில் உள்ள தாவரவியலாளர்களின் கருத்துப்படி, 7மூ-8மூ வீதமான வல்லப்பட்டை மரங்களில் மாத்திரம் தான் இயற்கை காரணங்களினால் அகர்வுட் உருவாக்கப்படுகிறது. இருப்பினும், அனைத்து வல்லப்பட்டை மரங்களும் அகர்வுட் பிசின்களை உற்பத்தி செய்ய முடியாது.

சந்தனக்கட்டை மர வளர்ப்பின் மூலம் அதன் அனுகூலங்களை பெறுவதற்கு 20 ஆண்டுகள் ஆகின்றன. இருப்பினும், 10 வருடங்களில் நன்மைகளை பெறக்கூடிய அகர்வுட் செய்கையை ஒருவரது வீட்டுத்தோட்டத்தில் வளர்ப்பதனூடாக நிலையான மற்றும் உயர் வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடியும்.

இந்த ஆய்வில் முதன்மையாக பணிபுரிந்த ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வனவியல் மற்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞானப் பிரிவின் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான டாக்டர். உபுல் சுபசிங்க கருத்து தெரிவிக்கையில், 'இந்த மரத்தின் வணிகத்தன்மை காரணமாக தனியார் துறையின் ஆர்வம் பெரிதும் அதிகரித்துள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக இன்று கொள்கையின்மை மற்றும் அதிக வளங்களை சுரண்டுதல் போன்ற பல்வேறு பிரதிகூலன்களை காணக்கூடியதாக உள்ளது. இதற்கு வல்லப்பட்டை மரங்களின் அழிவு சிறந்த உதாரணமாகும். இருப்பினும், உண்மையான பொருளாதார திறன் குறித்து புரிந்து கொண்டால் மற்றும் பொருத்தமான விதிமுறைகளை செயல்படுத்தினால் அகர்வுட் அல்லது வல்லப்பட்டை செய்கையின் மூலம் அதிக அனுகூலன்களை பெற்றுக்கொள்ளலாம்' என தெரிவித்தார்.

'சதாஹரித பிளான்டேஷன் நிறுவனம், அரசாங்கத்தின் ஆதரவுடன் வல்லப்பட்டையின் வணிக ரீதியான திறனை உணர்ந்துள்ளதுடன், இந்த சாத்தியங்கள் குறித்து அண்மைய ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அகர்வூட்டிற்கு வணிக ரீதியான ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆக்கவுரிமை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஆய்வுகளின் ஊடாக நாம் வல்லப்பட்டை மரங்களுக்காக மரங்களினுள்ளே செயற்கையாக பிசின்களை உற்பத்தி செய்யும் செயல்முறைகளை பயன்படுத்தினோம். எமது ஆராய்ச்சியின் முடிவுகள், வல்லப்பட்டை மரங்களை அழிவிலிருந்து காப்பாற்றும் என நம்புகிறோம்' என மேலும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் தைமலிகா குடும்பத்தைச் சேர்ந்த அகர்வுட் உற்பத்தி செய்யும் இனம் எகியுலேரியா ஆகும். நாட்டில் அகர்வுட் தொழில்நுட்பத்திற்கான ஆக்கவுரிமையை கொண்டிருக்கும் ஒரேயொரு நிறுவனம் சதாஹரித பிளான்டேஷன் ஆகும். அகர்வுட்டினை வீட்டு வளர்ப்பு செய்கையாக ஊக்குவிக்கும் ஆரம்ப முயற்சியாக, இந் நிறுவனம் 'எகியுலேரியா கிறெஸ்னா' வகையினை வெற்றிகரமாக ஊக்குவித்து வருகிறது. இதற்கு மேலதிகமாக, எகியுலேரியா உள்ளே அகர்வுட்டின் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான ஊயு முவை முறைக்கு இலங்கையில் உரிமம் பெற்ற ஒரேயொரு நிறுவனம் சதாஹரித ஆகும்.

இந்த ஆய்வு குறித்து பிரதம நிறைவேற்று பணிப்பாளர் எச்.கே.ரோஹன கருத்து தெரிவிக்கையில், 'ஒரு காலப்பகுதியில் வல்லப்பட்டை தொடர்பில் விவாதங்கள் மற்றும் ஊகங்கள் பல காணப்பட்டன. இந்த செய்கையை வீட்டுத்தோட்ட வளர்ப்பாக செயல்படுத்துவதற்கான திறன் எம்மிடமிருப்பதையிட்டு பெருமையடைகிறோம். வல்லப்பட்டை மரங்களை ஏற்றுமதி செய்வது சட்ட விரோதமானது. மேலும் இம் மரங்களை வெட்டுதல் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியது. இருப்பினும், வல்லப்பட்டை பிசின்களுக்கான அதிக கேள்வி மூலம் எழும் பொருளாதார அனுகூலன்களை அலட்சியம் செய்து விடவும் முடியாது. இருப்பினும், அகர்வுட் செய்கை ஊடாக வல்லப்பட்டை மரங்கள் நிர்மூலமாக்கப்படுதல் நிறுத்தப்படுவதுடன், இலங்கையர்கள் தங்கள் வீட்டு தோட்ட வளர்ப்பாக இம் மரங்களை வளர்ப்பதன் மூலம் சர்வதேச சந்தையில் இதற்கு அதிக கேள்வி ஏற்படுவதுடன், அவர்கள் வருவாயையும்;, நாட்டின் பொருளாதாரத்திற்கு வெளிநாட்டு அன்னிய செலாவணியையும் ஈட்டிக்கொடுக்க முடியும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .