2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

செப்டெம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 09 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

செப்டெம்பர் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 16.8 வீதத்தால் அதிகரித்து 105,535 ஆக பதிவாகியிருந்தது.
 
இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் காணப்பட்ட அதிகரிப்பு, இந்த எண்ணிக்கையில் உயர் பங்களிப்பை வழங்கியிருந்தது. 
 
இதற்கமைவாக நடப்பு ஆண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 22.4 வீதத்தால் அதிகரித்து 1,107,178 ஆக பதிவாகியுள்ளது. 
 
2014ஆம் ஆண்டில் மொத்தமாக 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இலங்கை திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X