Editorial / 2020 ஜனவரி 19 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை வங்கி தனது டிஜிட்டல் வங்கியியல் அனுபவத்தை ஆண்டிகம மற்றும் வீரபொகுணவுக்கு விஸ்தரித்துள்ளது. இந்த டிஜிட்டல் நிலையங்களின் அங்குரார்ப்பண நிகழ்வில் விற்பனை மற்றும் நாளிகை செயற்பாடுகள் பிரதி பொது முகாமையாளர் சி. அமரசிங்க கலந்து கொண்டார். வட மேல் மாகாணத்தின் உதவி பொது முகாமையாளர் டபிள்யு. ஏ. உபாலி இந்நிகழ்வில் பங்கேற்றார்.
ஆண்டிக கிளை டி.எம். புத்தி மஹால், ஆண்டிகம சந்தி, ஆண்டிக எனும் முகவரியில் அமைந்துள்ளது. வீரபொகுண நிலையம் ரன்கெத்த, வீரபொகுண எனும் முகவரியிலும் அமைந்துள்ளன. வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த வங்கிச் சேவைகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்த சேவை விஸ்தரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை வங்கி அறிவித்துள்ளது.
1 hours ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
4 hours ago