2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

1 இலட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை வழங்கல்

Editorial   / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

விவசாய அமைச்சர் மாகாணசபையின் நிதி ஒதுக்கீட்டில் 1 இலட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தார். 

வடமாகாணசபையின், குறித்து ஒதுக்கப்பட்ட நீதியின்கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தினைச் சேர்ந்த 2 விளையாட்டு கழகங்களுக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் விளையாட்டு உபகரணங்கள் வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசனினால் வழங்கி வைக்கப்பட்டது.

வடமாகாண விவசாய அமைச்சரின் மாகாணசபை நிதி ஒதுக்கீட்டில் முள்ளியவளை வெண்மலர் விளையாட்டுக் களகத்திற்கும் விசுவமடு தோழர்கள் விளையாட்டுக்களகத்திற்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உள்ள விளையாட்டு திணைக்கள கட்டத்தில் மாவட்ட விளையாட்டு திணைக்கள அதிகாரி எஸ்.முகுந்தன் தலைமையில் நடைபெற்றது.

இதில் விளையாட்டு வீரர்களுக்கு உபகரங்கங்களை வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் வழங்கி வைத்து கருத்துரை நிகழ்த்தினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X