2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

இராஜினாமா செய்யும் தீர்மானத்தை கைவிட்டார் செல்வம் எம்.பி

Kogilavani   / 2013 ஒக்டோபர் 07 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

டெலோ அமைப்பின் தலைமைப் பதவியை இராஜினாமா செய்யும் தீர்மானத்தை பலருடைய வேண்டுகோள்களை ஏற்று கைவிடுவதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைச்கலநாதன் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'வடமாகாண சபையில் வன்னி மாவட்டத்திற்கென அமைச்சுப் பதவியொன்று வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. எனினும் கட்சித் தலைமை அந்தப் பதவியை யாழ்.மாவட்டத்திற்கு   வழங்குவதற்குத் தீர்மானித்திருந்தது.

கட்சியின் முடிவுக்குக் கட்டுப்பட்ட போதிலும் வன்னி மாவட்ட மக்களுக்குப் பொறுப்பு கூறும் வகையில் தலைமைப் பதவியை ராஜிநாமா செய்ய உத்தேசித்திருந்தேன்.

ஆனால், எனது இந்த நடவடிக்கை கட்சியின் செயற்பாட்டுக்கும் மாகாண சபையின் செயற்பாடுகளுக்கும் ஆரோக்கியமாக இருக்கமாட்டாது என்று சுட்டிக்காட்டி எனது இராஜினாமா யோசனையைக் கைவிடுமாறு பலரும் கேட்டுக் கொண்டதையடுத்து அந்தக் கோரிக்கையில் உள்ள நியாயத்தன்மைமையை உணர்ந்து எனது இராஜினாமா தீர்மானத்தை கைவிட்டுள்ளேன்' என்று  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0

  • AJ Monday, 07 October 2013 07:48 AM

    நல்ல விடையம். சரியான முடிவு. எங்களுக்கு கருத்து வேறுபாடு இருந்தாலும் மக்கள் நலன் கருத்தின் த.தே.கூ அங்கம் வகிக்கும் அனைவரும் உணர்ந்து செயல்படவேண்டும். நாங்கள் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும். போருக்கு பின்னர் நாங்கள் பல விடயங்களில் வெற்றி பெற்று இருக்கிறோம் என்றால் அது உங்களில் மக்களின் ஒற்றுமையே காரணம். ஏக்காரணம் கொண்டும் யாரும் பதவி விலகவோ எதுவித மக்களின் நலனை பாதிக்கும் முடிவை தயவு செய்து எடுக்கவேண்டாம்...

    Reply : 0       0

    Mohammed Monday, 07 October 2013 08:04 AM

    நல்ல ஜோக்

    Reply : 0       0

    KB Monday, 07 October 2013 01:06 PM

    நல்ல முடிவு. வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    raja Monday, 07 October 2013 03:55 PM

    இது ஒரு கொமடி பீஸ்

    Reply : 0       0

    Siva Monday, 07 October 2013 05:20 PM

    நல்லது செல்வம்

    Reply : 0       0

    Siva Monday, 07 October 2013 05:23 PM

    2013 ஜோக்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X