2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

இந்தியப்பிரஜைகள் இருவர் மன்னாரில் கைது

Kanagaraj   / 2013 டிசெம்பர் 17 , மு.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் பஸ் தரிப்பிடம் மற்றும் சிலாவத்துறை பகுதியில் சட்டவிரோதமான முறையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்தியப்பிரஜைகள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சுற்றுலா விஸாவில் வருகைதந்திருந்த இருவரே இவ்வாறு சட்டவிரோதமான முறையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னார் பஸ் நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டவருக்கு 71 வயது என்றும் சிலாவத்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டவருக்கு 45 வயது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட இவ்விருவரையும் இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .