2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

கருத்தடையின் பின் பெண் மரணம்; நீதியான விசாரணை கோரி வழக்கு

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 19 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

கருத்தடை செய்யப்பட்டதை அடுத்து மரணித்த பெண் தொடர்பாக நீதியான விசாரணை வேண்டுமென யாழ் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (19) வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, மலையாள்புரம் பகுதியில் அண்மையில் கருத்தடை செய்யப்பட்டதன் பின்னர் மரணமடைந்திருந்த சதீஸ் மஞ்சுளாவின் மரணம் தொடர்பாகவே நீதியான விசாரணை வேண்டும் என்று இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் இல்லத்தைச் சேர்ந்த சிரேஸ்ட சட்டத்தரணிகளான ஸ்ரீ சிவாயா, ப.குகணேஸ்வரன், திருமதி. ம.ரசிதா ஆகியோர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.

வழக்கை கவனத்திற்கொண்ட நீதவான், எதிர்வரும் 24ஆம் திகதி இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி...

கருத்தடையின் போது உயிரிழந்த பெண்; விசாரணைகள் மும்முரம்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .