2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ஐ.நா விசாரணை படிவம் விநியோகித்தவர் கைது

Kanagaraj   / 2014 ஒக்டோபர் 26 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்கு அனுப்புவதற்கான படிவத்தை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சி கிராஞ்சியை சேர்ந்த 58 வயதுடைய சின்னத்தம்பி கிருஸ்ணன் என்பவர் இராணுவ புலனாய்வாளர்களால் சனிக்கிழமை (25) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி நபர் கிளிநொச்சி இரணைமாதா நகரில், ஐ.நா. விசாரணை படிவங்களை விநியோகம் செய்துகொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி இராணுவ புலனாய்வாளர்கள் அலுவலகத்தில் வைத்து மேற்படி நபரை விசாரணை செய்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .