2025 ஜூலை 14, திங்கட்கிழமை

திருட்டில் ஈடுபட்டவர் கைது

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 27 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியாவிலுள்ள வீடுகளில்; பல நாட்களாக திருட்டில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படும்  ஒருவரை வவுனியா பொலிஸார் புதன்கிழமை (27) கைதுசெய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவிலுள்ள பல வீடுகளிலும் சூட்சுமமான முறையில் பொருட்களை திருடியதுடன், வீட்டின் முன்பாக நிறுத்திவைக்கப்படும் மோட்டார் சைக்கிள்களின் உதிரிப்பாகங்கைளயும்  இரவு வேளையில் இவர் திருடிவந்ததாகவும் தெரியவருகின்றது.

இந்தச் சந்தேக நபரிடமிருந்து மடிக்கணினி, கையடக்கத் தொலைபேசிகள்,  மோட்டார் சைக்கிளின் உதிரிப்பாகம் ஆகியவற்றுடன்,  சந்தேக நபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்தச்  சந்தேக நபரை  வவுனியா நீதிமன்றத்தில்  வியாழக்கிழமை (27) ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .