2025 ஜூலை 14, திங்கட்கிழமை

முத்தையன்கட்டு நீர்ப்பாசன குளங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 03 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன்கட்டு நீர்ப்பாசன திணைக்களத்துக்கு கீழுள்ள குளங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக முத்தையன்கட்டு நீர்ப்பாசன பொறியியலாளர் புதன்கிழமை (03) தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக குளங்களின் நீர் மட்டங்கள் அதிகரித்துள்ளன. ஏற்கனவே வவுனிக்குளத்துக்கு கீழுள்ள 3 குளங்கள் வான் பாய்கின்றன.

இந்நிலையில் முத்தையன்கட்டு நீர்ப்பாசன குளத்துக்கு கீழான குளங்களின் நீர் மட்டமும் அதிகரித்துள்ளது.

முத்தையன்கட்டு குளத்தில் 13 அடி 6 அங்குலமும், கணுக்கேணி குளத்தில் 12 அடி 6 அங்குலமும், உடையார்கட்டு குளத்தில் 23 அடி 4 அங்குலமும், தட்டையன்மலை குளத்தில் 13 அடி 9 அங்குலமும், தண்ணி முறிப்பு குளத்தில் 13 அடியும், விசுவமடு குளத்தில் 20 அடி 3 அங்குலமும், மருதமடு குளத்தில் 14 அடி 2 அங்குலமும், மடவாளசிங்கன் குளத்தில் 16 அடி 6 அங்குலமும் நீர் மட்டம் காணப்படுகின்றன.

தொடர்ந்து வரும் நாட்களிலும் மழை பெய்யும் சந்தர்ப்பத்தில் குளங்களில் வான் பாயும் நிலையேற்படும் என பொறியியலாளர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .