2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையில் புதிய முதலீடுகளை செய்ய சுவிஸ் தயார்: றிசாட்

Kogilavani   / 2015 மே 20 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இலங்கையில் புதிய முதலீடுகளை செய்வதற்கு சுவிஸ் நாடு தயாராகவுள்ளதாகவும் அதற்கு இலங்கையின் முதலீட்டு தளம் சிறந்ததாக காணப்படுவதாக சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஹெனிஸ் வோர்கர் நெவில் கூன் கைத்தொழில், வணிகத்துறை அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள சுவிஸ் நாட்டின் உயர்மட்ட குழுவினருக்கும் அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற வர்த்தக மேம்பாடு தொடர்பிலான கலந்துரையாடலின்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது அமைச்சர் றிசாட் பதியுதீன், தூதுக்குழுவுக்கு இலங்கை அரசும் சுவிட்ஸர்லாந்து அரசும் செய்துள்ள வர்த்தக இருதரப்பு உடன்படிக்கை தொடர்பாக விளக்கமளித்தார்.

சுவிட்ஸர்லாந்து அரசு இலங்கையில் முதலீடுகளை செய்வது எமது நாட்டில் புதிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர் றிசாட்; பதியுதீன் இதன்போது குறிப்பிட்டார்.

இதேவேளை இருதரப்பு உடன்படிக்கை தொடர்பிலும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .