2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

விபத்தில் முதியவர் பலி

Thipaan   / 2015 ஜூன் 14 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா கனகராயன்குளத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்ற விபத்தில் 65 வயதான முதியவரொருவர் பலியானதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

மருத்துவர் ஒருவர் பயணித்த கார், துவிச்சக்கரவண்டியை மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில், கனகராயன்குளத்தை சேர்ந்த 65 வயதுடைய நாகமுத்து தெய்வேந்திரப்பிள்ளை என்பவர் பலியாகியுள்ளார்.

இதனையடுத்து காயமடைந்த அவர்  வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .