2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பழுதடைந்த மீன்கள் விற்பனை

Kogilavani   / 2015 ஜூன் 16 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி பொது சந்தையில் பழுதடைந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். நீண்ட தூரங்களில் இருந்து கொண்டுவரப்படும் இம்மீன்கள் முதல் நாள் கொண்டுவரப்பட்டு குளிரூட்டபட்ட நிலையில்; விற்பனை செய்யப்படுவதாக  பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பில், கரைச்சிப் பிரதேசசபை தவிசாளர் நா.வை.குகராசாவிடம் வினவியபோது 'நாங்கள் குறித்த சந்தை தொடர்பில் முன்னர் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் பழுதடைந்த மீன் விற்பனை கட்டுப்படுத்தப்பட்டது. இதற்கென கண்காணிப்பாளர் ஒருவரை நியமித்துள்ளோம். மீண்டும் பழுதடைந்த விற்பனை செய்யப்படுவது தொடர்பில் இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கபெறவில்லை' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X